Sonntag, 1. April 2007

அ-1

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

-இது நான் சின்ன வயசிலை படிச்சது.

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.

-இது கொஞ்சம் பெரிய பெடியனாய் வளர்ந்தபோது படிச்சது.

எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்து அகரம்.
எண்களுக்கு முதல் எண் 1.

எல்லாத்திலையும் திறமா இருக்கிறதை இங்கிலீஸ்காரன்
A1 எண்டு சொல்கிறது தெரியும்.

இதையே தமிழிலை சொல்றதெண்டால் அ1 எண்டு
சொல்லவேணும்.

ஆனா ஒண்டு எண்டு நான் சொல்லத் துவங்கினால் நீங்கள் சொல்ல வாறதுக்கு நான் ஏதோ மறுப்புச் சொல்ல வாறனாக்கும் எண்டு நீங்கள் நினைக்கப்படாது.

ஆனா ஒண்டு எண்டது நாங்கள் அடிக்கடி பாவிக்கிற சொல்லுத்தான்.

நீங்கள் சொல்கிறது சரிதான் ஆனா ஒண்டு நாங்கள் சொல்லுறதிலையும் ஞாயம் இருக்கெண்டு உங்களுக்கு விளங்கவேணும்.

நீங்கள் கதைச்சதெல்லாம் சரிதான் ஆனா ஒண்டு நீங்கள் அவசரப்பட்டுக் கதைச்சிட்டியள் எண்டெல்லாம் ஆனா ஒண்டு வருகுது.


ஆனா நான் இங்கை சொல்லப்போற ஆனா ஒண்டு
இங்கிலீஸ்காரன்ரை A1 எண்ட அர்த்தத்திலைதான்.


விளங்கிக்கொள்ளுவியள் எண்டு நினைக்கிறன்.

ஆனா ஒண்டு உங்களுக்கு விளங்காட்டிலும் நான் எழுதிறதை நிப்பாட்டமாட்டன் எண்டு மட்டும் இப்போதைக்குச் சொல்லுறன்.


-சின்னாச்சியின்ரமோன்.

2 Kommentare:

Anonym hat gesagt…
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym hat gesagt…
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.