Mittwoch, 4. April 2007

ரெண்டிலை ஒண்டு (1/2)

ரெண்டிலை ஒண்டு 1/2

"இண்டைக்கு நான் ரெண்டிலை ஒண்டு பார்க்காமல் விடப் போறதில்லை!" எண்டு ஆவேசப்படுகிறவர்களைச் சந்திச்சிருக்கிறம்.

அதென்ன ரெண்டு? அதிலை என்ன ஒண்டு? எண்டு அப்ப ஆரும் கேள்வி எழுப்பிறதில்லை.
ஒரு முடிவோடதான் திரும்புவன் எண்டு அவர்கள் சொல்லிப் போறதாகத்தான் தெரியும்.

அரைப்பங்கு எண்டு இலக்கத்திலை குறிக்கவேணுமெண்டால் ஒண்டுக்குக் கீழை ரெண்டைப் போட்டு ரெண்டில் ஒண்டு எண்டு எழுதுவம்.
அப்ப ரெண்டிலை ஒண்டு பார்க்கிறதெண்டால் எடுத்த காரியத்திலை அரைப்பங்குதான் சரிவரும் எண்டு அர்த்தம் வருமோ?
இல்லை.. அப்பிடி இருக்காது.

ஆனா ஒண்டு, எடுத்தகாரியத்திலை ஏதோ ஒரு முடிவு வரவேணுமெண்டால் ரெண்டிலை ஒண்டுதான் சரிவரும்.
என்ன?
வெற்றி இல்லாட்டில் தோல்வி எண்ட ரெண்டிலை ஒண்டு.

வெற்றி கிடைச்சால் அந்தக் காரியம் முழுமையாகிடும்.
தோல்வி கிடைச்சால் அந்தக் காரியம் பாதிதான்.
அதுதான் ரெண்டிலை ஒண்டு.

எப்பவுமே உலகத்திலை நாங்கள் காண்கிறது எல்லாமே ரெண்டு ரெண்டாத்தான் இருக்குது.
அம்மா-அப்பா, இரவு-பகல், இன்பம்-துன்பம், உறவு-பிரிவு, வெப்பம்-குளிர், வெற்றி-தோல்வி இப்பிடி ஒண்டோடை ஒண்டுகலந்திருக்கும். ஆனால் ரெண்டாக இருக்கும்.

"இப்பிடி ஏடாகூடமா ஏதாவது எழுதிக்கொண்டிருந்தியானால் உன்னை நாங்கள் ரெண்டிலை ஒண்டு பார்க்கவேண்டி வரும்!" எண்டு நீங்கள் ஆவேசப்பட்டால் அதுக்கு நான் ஒண்டும் செய்ய முடியாது.
ஏனெண்டால் நீங்கள் சொல்லிற அந்த ரெண்டிலை ஒண்டு என்னெண்டு உங்களுக்கு விளங்காதவரையிலை நீங்கள் என்னை ஒண்டும் செய்ய முடியாது.

அதுசரி-
இந்த ரெண்டிலை ஒண்டு எண்டால் என்ன எண்டு வடிவாய் யோசிச்சால் உலகத்திலை பிறந்த எல்லாருமே ரெண்டிலை ஒண்டுதான் எண்ட உண்மை எல்லாருக்கும் விளங்கும்.

அதாவது அப்பா - அம்மா எண்ட ரெண்டு சீவன்கள் ஒண்டாய்ச் சேர்ந்ததாலைதான் பிள்ளை எண்ட ஒண்டு.

அது ரெண்டிலையிருந்து வந்த ஒண்டு - அதாவது ரெண்டில் ஒண்டு.

சின்னவயசிலை நினைச்சது நடக்குமா எண்டு பார்க்கிறதுக்கு மனசிலை ஒண்டை நினைச்சுக்கொண்டு கைவிரல்களை நீட்டி"ரெண்டிலை ஒண்டைத் தொடு!" எண்டு கேட்டிருக்கிறம்.

நினைச்ச காரியம் ஒண்டுதான்.
ஆனா கேள்வி கேக்கிறபோது ரெண்டு.

ஒரு கேள்விக்கு ஒரு மறுமொழிதான் இருக்கவேணுமெண்டதில்லை.
அதுமாதிரித்தான் இந்த ரெண்டிலை ஒண்டு.

பிற்குறிப்பு:
சின்னாச்சியின்ரமோன் வலைபதியத் தொடங்கின காலம்முதல் கணணியோட மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மண்டை காய்ஞ்சதிலை இண்டைக்கு ரெண்டிலை ஒண்டு பார்க்காமல் இந்த இடத்தைவிட்டு எழும்பிறதில்லை எண்டு எழுதத் தொடங்கினதுதான் இது.
இப்ப ஜெர்மனியிலை வெய்யில் தொடங்கியிருக்குது எண்டதையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ!
இந்த வரியம் எறிக்கிற வெய்யிலாலை கன வருத்தங்கள் வரப்போகுது எண்டும்
உங்கினை ஒரு கதை அடிபடுகுது.

Keine Kommentare: